Pages

Subscribe:

Tuesday, November 11, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் ஒரு வரலாற்றுப் பார்வை



"பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன".

Friday, October 24, 2008

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் வசனங்களைத் திரித்து வியாக்கியானம் செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து இல்லாததை இட்டுக் கட்டியும் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது. முஸ்லிம அறிஞர்களுக்கு முன் பகிரங்கமாக வருவதற்கு பயப்படும் மிஷினரிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம்.

Friday, October 10, 2008

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன்.

Thursday, October 2, 2008

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR


கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.

Monday, September 15, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.

Sunday, September 14, 2008

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும்.

Friday, September 12, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல்

பைபிள் - ஓரு விரிவான அலசல்
(Reference : Bibilinte Daivikatha by MM Akbar in Malayalam)


பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.

புத்தகங்கள் என்று மட்டும் பொருள் கொண்ட பைபிளுக்கு கிறித்தவ வேத புத்தகம் என்ற அடிப்படைப் பெயரை வழங்கியவர் அன்றைய கான்ஸ்டான்டிநோபிளின் மதத் தலைவராக இருந்த ஜாண் கிரிஸோஸ்டமான் (392-404) என்பவர் என்று நம்பப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரே முதன் முதலில் பைபிள் என்ற பெயரை வழங்கியவர் என்ற கருத்தும் நிலவுகிறது.

Friday, August 8, 2008

யோவான் அத்தியாயத்திலும் திருத்தம்

மத்தேயு அத்தியாயத்திதல் இடைச் செருகல் உள்ளது போலவே பைபிள் பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருத்தம் யோவான் அத்தியாயத்திலும் உண்டு. இவ்வாறு இடைச் செருகப்பட்ட வரிகள் யோவான் 7 ஆம் அத்தியாயாம் 53 முதல் 8 ஆம் அத்தியாயம் 11 வரை உள்ள வரிகளாகும். பைபிளின் புராதன கையெழுத்துப் பிரதிகளில் மேற்படி வரிகள் இல்லை. இடைச் செருகப்பட்ட வரிகள் யோவானின் வரிகளின் போக்குடன் மாறுபட்டதாக உள்ளது. நியு ஜெருசலேம் பைபிள் இது குறித்து இவ்வாறு கூறுகிறது.

Monday, July 28, 2008

தண்ணீரிலும் திரித்துவம்!

திரித்துவம் எனும் மாயை - தொடர் 3

தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.

Tuesday, July 22, 2008

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்


பைபிளின் பக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன, பைபிளில் இடைச் செருகல்கள் உள்ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இன்னும் பல வசனங்களும் பைபிளுக்கு பைபிள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய திருத்தங்களுக்கு சில சாக்குப் போக்குகளைக் கூறி பைபிள் அறிஞர்களே அதனை ஒப்புக் கொள்கின்றனர். சில மேற்கோள்கள்:

1. புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட் நூலாகக் கருதப்படும் மாற்கு எழுதிய சுவிசேஷம். கி.பி 64 ல் இருந்து 70 க்குள் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பைபிள் பண்டிதர்களின் கருத்து. மாற்கு எழுதிய அத்தியாயத்தில் இயேசு உயிர்த்து எழுந்ததாக உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும்.

Sunday, July 20, 2008

திரித்துவமும் பெருக்கல் வாய்ப்பாடும்.

திரித்துவம் ஒரு மாயை - தொடர் - 2


கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்?

திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் கொண்ட மூவர்! அப்படியானால் 1 + 1 + 1 = 3 அல்லவா? எப்படி ஒன்றாகும்? என்ற கேள்விக்கு கிறித்தவ சபை அளித்த விடை. 1 x 1 x 1 = 1 என்பதாகும்.

Thursday, July 10, 2008

ஒரு புனிதரின் கதை!

 
புனிதர் திரித்துவத்தின் பொருள் தேடிப் பயணித்தார். காடு மலை மேடு பள்ளங்கள் கடந்த நெடும் பயணம். இறுதியாக ஒரு கடலோரமாகப் பயணித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு சிறுவன் மணற் கூடாரத்தை அமைத்து அதன் மேல் ஒரு துவாரமிட்டு கடல் நீரைக் கைகளில் மொண்டு அதில் உற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த புனிதர், சிறுவனே என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்? என்று சிறுவனிடம் கேட்கிறார், ஐயா நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் இந்த மணற் கூண்டில் நிறைக்கப் போகிறேன் என்றான் சிறுவன். ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்திய புனிதர் சிறுவனே! இது என்ன முட்டாள் தனம்? இந்த மகா சமுத்திரத்தின் நீர் முழுவதையும் இந்த மணல் கூண்டில் நிறைப்பதா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கிறார். சிறுவன் நிதானமாகக் கூறினான். ஐயா பெரியவரே! தாங்கள் பொருள் தேடிச் செல்லும் காரியம் இதைவிடக் கடுமையானது! புனிதர் இப்போது தன் நிலை பற்றி சிந்தித்த வண்ணம் வந்த வழியே திரும்புகிறார்.

Thursday, July 3, 2008

கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமைத் தழுவிய மாபெரும் மன்னர்

அன்று அபிஸீனிய மன்னராக இருந்தவர் நஜ்ஜாஷி. இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை நபி (ஸல்) அவர்கள் எழுதி அனுப்பினார்கள். நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன்.