Pages

Subscribe:

Thursday, May 17, 2012

சிலுவை வடுவும் விக்கி பீடியாவும்

Selvarajon

நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?


செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இயேசுவைப் பாவியாக்குவது குர்ஆனா? பைபிளா?

கேள்வி:

அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர் பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரானஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?

1.
பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார் இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில் எங்காவது கூறப்படவில்லையே. இதைச் சொல்பவர்களைிடம் கர்வம் கொண்டு புறக்கணிப்பதும், கொலை செய்வதும் இஸ்லாமியர் செய்யும் தவறு என குரானே கூறுவதை ஏற்றுக் கொள்வீரா?

Saturday, May 5, 2012

கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!

உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக் கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.  பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம் மட்டும் தான் உண்மை மதமா?  உலகில் ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின்  வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை?

மேற்கண்ட கேள்விகள் பொதுவாக கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவ மத்திலிருந்து இஸ்லாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் சிலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு கிறிஸ்தவர் பதிவு செய்த கேள்வியும் ஆய்வு மற்றும் மூல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான விரிவான பதிலையும் கீழே கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்களுக்கு இதிலிருந்து தீர்வு கிடைக்கலாம்.