
அல் குர்ஆன் மற்றும் பைபிளில் உள்ள வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பாய்வு
(Translated from "Qur'aninte Mouligatha" by M.M. Akbar)


"ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன்" ஒரு சகோதரியிடமிருந்து நமக்கு வந்த கடிதம்!
இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi
திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)
(Courtesy to: http://www.islamic-awareness.org/)
ஹீப்ரு பைபிளில் ‘ஷம்ரோனிம்’ என்ற வார்த்தை (அடிக்கோடிடப்பட்டது)சமாரியர் என்று தமிழிலும் samaritan என்று ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் சமாரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.
ஆனால் சமாரியர்கள் இதற்கு சற்று நிகரான உச்சரிப்பை உடைய ஆனால் முற்றிலும் வேறுபட்ட ஒரு பொருளைத் தரக்கூடிய ஒரு வார்த்தையால் தம்மை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர் என்பதை கிறிஸ்தவ உலகம் தந்திரமாக மூடி மறைத்து விட்டது!
அவர்கள் தம்மை அடையாளப்படுத்த ஷாமெரின்
(Shamerin என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் தோரா என்னும் வேதத்தைப் பாதுகாப்பவர்கள் அல்லது அதைப் பற்றிப் பிடித்து வாழ்பவர்கள் என்பதாகும்.
… the Samaritans prefer to style themselves ‘Shamerim’ i.e., “the observant” – rather than ‘Shomeronim’ i.e., “the inhabitants of Samaria.” -Samaritans” in G. A. Buttrick (Ed.), The Interpreter’s Dictionary Of The Bible, Volume 4, 1962 (1996 Print), Abingdon Press, Nashville, p. 191(Courtesy to: http://www.islamic-awareness.org/)
மோசேவுக்குப் பின்னர் உருவானவர்களே சமாரியர்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் இது தொடர்பான விரிவான ஆய்வுகளும் சமாரியர்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளும் சமாரியர்களுக்கு மிகப் பழமையான வரலாறு உள்ளது என்பதைத் தெளிவு படுத்துகிறது !
தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்றும் வேதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் வாதிக்கும் ஓர் இனத்தைப் பற்றி ஹார்பர்ஸ் பைபிள் அகராதியும் (Harpers Bible Dictionary) கூறுகிறது. இவர்கள் தங்களை ஷாமெரிம் (Shamerim) என்று அழைக்கிறார்கள். வேதத்தை முறையாகப் பின்பற்றுபவர்கள் என்பது இதன் பொருளாம்.
“ஒரு மதப் பிரிவினர்கள் என்ற முறையில் சமாரியர்கள் ஒழுக்க நெறி மிக்கவர்களாகவும் தோராவைப் பற்றிப்பிடித்து வாழ்பவர்களாகவும் தங்களின் மத பாரம்பரியத்தில் அபிமானம் கொளக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். புராதன இஸ்ரவேல் கற்பித்த மதத்தை யூதர்களை விட தாங்களே உண்மையாகக் கடைபிடிப்பவர்கள் என்றும் அவர்கள் தங்களைக் குறித்து கூறுகிறார்கள். தங்களைக் குறித்து அவர்கள் கூறுவது “ஷாமெரிம்” (தோராவைக் கடைபிடிப்பவர்கள்) என்றாகும். யூதாவின் பின்தோன்றல்கள் யூதர்கள் என்பதைப் போல புராதன கால யோசேப்பின் பின்தோன்றல்களே தாங்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்." (Harpers Bible Dictionary Page 899 – Quoted by M.M Akbar)
சமாரியர்களைக் குறித்து அவர்கள் சமரியாப் பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிட்டாலும் சமாரியர்கள் தங்களின் மூதாதையர்களைப் பற்றித் தரும் செய்திகள் இதற்கு மாற்றமாக உள்ளன.
ஒரு சமுதாயத்தின் உருவாக்கத்தைக் குறித்து அவர்களின் எதிர் தரப்பினர் தரும் செய்திகளை விடவும் அச்சமுதயாயத்தினர் சுயமாகவே தரும் தங்களின் பூர்வீகத்தைப் பற்றிய குறிப்புகள் வலிமை மிக்கது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சமாரியர்கள் எனப்படுவோர் தங்களை மத பாரம்பர்யம் உடையவர்களாகவும், ‘தோரா’ என்ற வேதத்தைக் கடைபிடிப்பவர்களாகவும் யோயேசப்பின் பின்தோன்னறல்களே தாங்கள் என்றும் தங்களை அவர்கள் அடையாளப் படுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட் ஆதாரங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் (Encyclopaedia Britanica) சமாரியர்களைக் குறித்து குறிப்பிடுவதாவது:
The Samaritans call themselves Bene-Yisrael (“Children of Israel”), or Shamerim (“Observant Ones”), for their sole norm of religious observance is the Pentateuch (first five books of the Old Testament). Other Jews call them simply Shomronim (Samaritans); in the Talmud (rabbinical compendium of law, lore, and commentary), they are called Kutim, suggesting that they are rather descendants of Mesopotamian Cuthaeans, who settled in Samaria after the Assyrian conquest.
சமாரியர்கள் தங்களை இஸ்ரவேலின் புத்திரர்கள் என்றும் “ஷாமெரிம்” (வேதத்தை கடைபிடிப்பவர்கள்) என்றும் அழைக்கின்றனர். ஏனெனில் அவர்களுடைய மத வழிபாடுகளின் அடிப்படையாக விளங்குவது பஞ்ச ஆகமங்களாகும். பிற யூதர்கள் அவர்களை ” ஷொம்ரொனிம்” Shomronim (சமரியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்கள்) என்று அழைக்கின்றனர். தல்ம (து என்னும் யூதர்களின் வேதத்)தி ல் அவர்களைக் (kutim) கூத்திம் என்று கூறப்பட்டுள்ளது. அசீரியர் வெற்றிக்குப் பின்னர் சமாரியாவில் குடியேறிய மெசப்பட்டோமியாவைச் சேர்ந்த கூத்தியர்களின் சந்ததிகள் என்ற எண்ணத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். (”Samartian” Encyclopaedia Britanica – online edition.)
யூதர்களின் கலைக் களஞ்சியமாகிய என்சைக்ளோபீடியா ஜூதாயிகா (The Encyclopaedia Judaica) சமாரியர்களின் பூர்வீகத்தைப் பற்றிய முக்கிய குறிப்பொன்றைத் தருகிறது. தங்களை யோசேப்பின் சந்ததிகள் என்று வாதிடும் சமாரியர்களின் வாதத்திற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளதாக யூதர்களின் கலைக் களஞ்சியம் குறிப்பிடுவதைப் பாருங்கள் :
Until the middle of the 20th century it was customary to believe that the Samaritans originated from a mixture of the people living in Samaria and other peoples at the time of the conquest of Samaria by Assyria (722–721 BCE). The Biblical account in II Kings 17 had long been the decisive source for the formulation of historical accounts of Samaritan origins. Reconsideration of this passage, however, has led to more attention being paid to the Chronicles of the Samaritans themselves. With the publication of Chronicle II (Sefer ha-Yamim), the fullest Samaritan version of their own history became available: the chronicles, and a variety of non-Samaritan materials. According to the former, the Samaritans are the direct descendants of the Joseph tribes, Ephraim and Manasseh, and until the 17th century CE they possessed a high priesthood descending directly from Aaron through Eleazar and Phinehas. They claim to have continuously occupied their ancient territory and to have been at peace with other Israelite tribes until the time when Eli disrupted the Northern cult by moving from Shechem to Shiloh and attracting some northern Israelites to his new followers there. For the Samaritans, this was the ’schism’ par excellence.(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)
சமாரியாவில் வாழ்ந்தவர்களும் அசீரியர்கள் சமாரியாவை வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் (கி.மு722) குடியேற்றப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு கலப்பினமே சமாரியர்கள் என்பதுதான் இருபதாம நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரையிலான நம்பிக்கையாக இருந்தது. பைபிளின் இரண்டாம் ராஜாக்கள் 17 ஆம் அத்தியாயம் இப்படி ஒரு நம்பிக்கை கொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. பைபிளின் இந்த நிலைபாடு மறுபரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆய்வில் சமாரியர்களின் புராதன ஆவணங்களுக்கு தனிக் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. செபர்ஹா-யாமிம் என்ற (சமாரியர்களின்) இரண்டாம் நாளாகமம் Chronicle II (Sefer ha-Yamim) வெளியிடப்பட்டதோடு சமாரியர்களின் வரலாறு முழுமையான வடிவத்தில் கிடைக்கப் பெற்றன. அத்துடன் அவர்களல்லாத மற்றவர்களைக் குறித்த சில குறிப்புகளும் அதில் காணப்பட்டன.
இதனடிப்படையில் யோசேப்பின் குலத்தவராகிய எப்பிராயீம், மானேசா முதலானவர்களின் நேரடி வழித்தோன்றல்களே சமாரியர்கள் ஆவர். மேலும் 17 நூற்றாண்டு வரை ஆரோன் முதற்கொண்டு எலியாசர் மற்றும் ஃபினெஹாஸ் வழியாக மாபெரும் புரோகிதத்துவத்தையும் அவர்கள் உரிமை கொண்டாடினர்.
வடக்கு மகாணத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களை தன்னுடைய மத ஆச்சாரங்களின்பால் பால் ஈர்ப்பதற்காக சேகேமிலிருந்து ஷீலோஹ் என்ற இடத்தில் மாற்றிக் கொண்டு அவர்களின் கலாச்சாரத்தில் சீர்குலைவு ஏற்படுத்திய ஏலீ என்பவரின் காலம் வரை இஸ்ரவேலர்களுடன் தாங்கள் சமாதானமாக வாழ்ந்ததாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். சமாரியர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. .(”Samaritans” in Encyclopaedia Judaica, 1972, Volume 14, op. cit., col. 727.)
கிறிஸ்தவர்கள் கூறுவதைப் போன்று கி.மு 722 ல் உருவானது அல்ல சமாரியர் என்ற சமூகம், மாறாக அதற்கு முன்னரே, யோசேப்பில் இருந்தே அவர்களின் பூர்வீகம் துவங்குகிறது என்பதை பல உறுதியான சான்றுகளைக் கொண்டு நிரூபித்துள்ளோம். ஷாமெரிம் அல்லது ஷாமெரின் என்ற வார்த்தையை ‘ஷம்ரோனிம்’ என்று மாற்றம் செய்த போது சமாரியர் என்ற இனம் ஒரு பிரதேசத்துடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்டது என்பதைத் தவிர இதற்கு வேறு அடிப்படைகள் இல்லை.
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோசேயின் காலத்திலும் வாழ்ந்து அவர்களில் ஒருவன் காளைக் கன்றின் சிலையை உருவாக்கி அதை வணங்குமாறு இஸ்ரவேலர்களிடம் கூறி அவர்களை வழிகெடுத்தான் என்றும் அவனைப் பற்றி ‘ஸாமிரி’ (சமாரியன்) என்று குர்ஆன் குறிப்பிட்டால் அது சரித்திர தவறு என்று எவ்வாறு கூற முடியும்?
மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை” என்று சரித்திரத்தில் நுனிப்புல் மேய்ந்து விட்டு அல்லது சரித்திரம் என்றால் அது பைபிள் மட்டுமே என்று மனப்பால் குடித்துக் கொண்டு அல்லது அறிந்து கொண்டே உண்மைகளை மூடி மறைத்துக் கொண்டு குர்ஆனின் மீது விமர்சனம் வைத்த கிறிஸ்தவர்கள் இனியேனும் உண்மையை அறிந்து கொள்வார்களாக. சத்திய இறைவேதத்தின் பால் தங்கள் கவனத்தை செலுத்துவார்களாக.
" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)காளைக் கன்றின் சிலையை உருவாக்கி இஸ்ரவேலர்களை வழிகெடுத்தது சாமிரியா? அல்லது பைபிள் கூறுவதைப் போன்று இறைதூதர் (ஆரோன் என்னும்) ஹாரூனா? என்பது குறித்து விரைவில் அடுத்த தொடரில்…
Published in: Islamkalvi

"பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்"
அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


