Pages

Subscribe:

Thursday, August 29, 2013

சத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ்

கேரளாவைச் சார்ந்த ஜெர்ரி தாமஸ் ஆங்காங்கே இஸ்லாமை விமர்சித்துப் பேசி வரும் ஒரு கிறிஸ்தவர். இவர் கேரளாவைச் சார்ந்தவர். தனக்கென மேடைகள் அமைத்து இஸ்லாத்தை விமர்சித்து வரும் இவர் ஒரு முறை டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களிடம் கேள்வி கேட்க வந்தார்.


கேள்வி கேட்கும் இவருக்கு பைபிளைக் குறித்த தெளிவான ஞானம் கூட இல்லை என்பதற்கும் டாக்டர் நாயக் அவர்களின் ஆணித்தரமான பதில்களுக்கு முன்னால் திணறித் திக்கு முக்காடுவதையும் இந்த வீடியோவில் காணலாம்.

Sunday, August 18, 2013

சத்தியத்திற்கு வழிகாட்டிய பைபிள்

யூசா இவான்ஸ் : அறிமுகம்:

குர்ஆன் இறை வேதம்! உலக மக்களுக்காக இறைவனிடமிருந்து இறங்கிய இறுதி வேதம்! எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ, எவர் சத்தியத்தைத் தேடுகிறாரோ அவருக்கு அது வழிகாட்டி. குர்ஆனைப் பற்றிய தப்புப் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அது சிரத்தில் ஒளிரும் விளக்காய், இருளில்  உழலும் மனிதர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாய்த் திகழும் அருளுக்குரிய இறை வேதம். சாத்தானின் அசரீரிகளைப் பற்றி கதையளந்து சாட்சிகளை முன் வைக்கும் கிறிஸ்தவமே வியந்து பார்க்கும் அளவுக்கு இஸ்லாமை நோக்கி கிறிஸ்தவர்க அணிவகுக்குச் செய்வதும் குர்ஆன் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் கிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்ட  யூசா இவான்ஸ் என்ற கிறிஸ்தவர்  தன் சத்திய தேட்டத்தின் இறுதியில்  குர்ஆனை முழுமையாகப் படித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உலக அரங்கில் அறியப்படும் ஓர் சத்தியப் பிரச்சாரகராக விளங்குகிறார். அவர் தன் சத்தியப் பயணத்தை விவரிக்கின்னறார்.