Pages

Subscribe:
Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Sunday, November 4, 2012

பரிசுத்த வேதாகமம் இறை ஆகமமா?

வ்வுலகில் வேதங்கள் என்று சொல்லப்படும் பல நூல்கள் உள்ளன. ஆனால் அவை அத்தனையும் இறை நூல்கள் என்ற அந்தஸ்தைப் பெற முடியுமா? மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் நூல்களும் மறை அல்லது வேதம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கப் படுகின்றன. குர்ஆனை இஸ்லாமியர்கள் வேதம் என்று நம்புகின்றனர். அல்லாஹ் என்று சொல்லக் கூடிய அந்த வல்லமை மிக்க இறைவன் நேரடியாகப் பேசும் வசனங்கள் அதில் உள்ளன.  இவ்வுலகில் பல்வேறு சமுதாயத்தவரால் வேதங்கள் என்று சொல்லப்படும் எந்த நூல்களும் குர்ஆனின் இறைதன்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும். அவற்றின் தொனி ஒரு கதை சொல்லும் பாங்கில் அல்லது உபதேசங்களின் ஒரு தொகுப்பு என்ற தகைமையோடு மட்டும் நின்று விடுகின்றன.

Thursday, October 2, 2008

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR


கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.

Monday, September 15, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.

Friday, September 12, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல்

பைபிள் - ஓரு விரிவான அலசல்
(Reference : Bibilinte Daivikatha by MM Akbar in Malayalam)


பிப்ளியா (biblia) என்ற கிரேக்க மற்றும் லத்தீன் மூலப் பதத்திலிருந்து உருவானது பைபிள் (bible) என்ற வார்த்தை. புத்தகங்கள் என்பது இதன் பொருளாகும். புராதன் பிரெஞ்சு மொழியிலிருந்து இது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பிப்ளியா என்பது பன்மை வார்த்தையாகும். இதன் ஒருமை பிப்ளியோன் (biblion) என்பதாகும்.

புத்தகங்கள் என்று மட்டும் பொருள் கொண்ட பைபிளுக்கு கிறித்தவ வேத புத்தகம் என்ற அடிப்படைப் பெயரை வழங்கியவர் அன்றைய கான்ஸ்டான்டிநோபிளின் மதத் தலைவராக இருந்த ஜாண் கிரிஸோஸ்டமான் (392-404) என்பவர் என்று நம்பப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரே முதன் முதலில் பைபிள் என்ற பெயரை வழங்கியவர் என்ற கருத்தும் நிலவுகிறது.

Friday, August 8, 2008

யோவான் அத்தியாயத்திலும் திருத்தம்

மத்தேயு அத்தியாயத்திதல் இடைச் செருகல் உள்ளது போலவே பைபிள் பண்டிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருத்தம் யோவான் அத்தியாயத்திலும் உண்டு. இவ்வாறு இடைச் செருகப்பட்ட வரிகள் யோவான் 7 ஆம் அத்தியாயாம் 53 முதல் 8 ஆம் அத்தியாயம் 11 வரை உள்ள வரிகளாகும். பைபிளின் புராதன கையெழுத்துப் பிரதிகளில் மேற்படி வரிகள் இல்லை. இடைச் செருகப்பட்ட வரிகள் யோவானின் வரிகளின் போக்குடன் மாறுபட்டதாக உள்ளது. நியு ஜெருசலேம் பைபிள் இது குறித்து இவ்வாறு கூறுகிறது.

Tuesday, July 22, 2008

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்

பைபிளில் திருத்தல்கள், இடைச்செருகல்கள்


பைபிளின் பக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன, பைபிளில் இடைச் செருகல்கள் உள்ளன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இன்னும் பல வசனங்களும் பைபிளுக்கு பைபிள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய திருத்தங்களுக்கு சில சாக்குப் போக்குகளைக் கூறி பைபிள் அறிஞர்களே அதனை ஒப்புக் கொள்கின்றனர். சில மேற்கோள்கள்:

1. புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட் நூலாகக் கருதப்படும் மாற்கு எழுதிய சுவிசேஷம். கி.பி 64 ல் இருந்து 70 க்குள் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பைபிள் பண்டிதர்களின் கருத்து. மாற்கு எழுதிய அத்தியாயத்தில் இயேசு உயிர்த்து எழுந்ததாக உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும்.