Pages

Subscribe:

Thursday, May 17, 2012

சிலுவை வடுவும் விக்கி பீடியாவும்

Selvarajon

நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?


செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இயேசுவைப் பாவியாக்குவது குர்ஆனா? பைபிளா?

கேள்வி:

அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர் பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரானஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?

1.
பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார் இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில் எங்காவது கூறப்படவில்லையே. இதைச் சொல்பவர்களைிடம் கர்வம் கொண்டு புறக்கணிப்பதும், கொலை செய்வதும் இஸ்லாமியர் செய்யும் தவறு என குரானே கூறுவதை ஏற்றுக் கொள்வீரா?

Saturday, May 5, 2012

கிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை!

உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக் கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு.  பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும் போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம் மட்டும் தான் உண்மை மதமா?  உலகில் ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின்  வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்று இறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை?

மேற்கண்ட கேள்விகள் பொதுவாக கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்தவ மத்திலிருந்து இஸ்லாமை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் சிலரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு கிறிஸ்தவர் பதிவு செய்த கேள்வியும் ஆய்வு மற்றும் மூல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான விரிவான பதிலையும் கீழே கொடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பான சந்தேகங்களுக்கு இதிலிருந்து தீர்வு கிடைக்கலாம்.



Tuesday, December 15, 2009

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi

இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய 'ஆரோன்' அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Saturday, December 5, 2009

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)

" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

Tuesday, November 11, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் ஒரு வரலாற்றுப் பார்வை



"பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன".

Friday, October 24, 2008

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் வசனங்களைத் திரித்து வியாக்கியானம் செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து இல்லாததை இட்டுக் கட்டியும் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது. முஸ்லிம அறிஞர்களுக்கு முன் பகிரங்கமாக வருவதற்கு பயப்படும் மிஷினரிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம்.