Pages

Subscribe:

Tuesday, December 15, 2009

இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்!

இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalvi

இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால் பைபிள் இதற்கு மாறாக மோசேயின் சகோதரரும் தீர்க்கதரிசியும் ஆகிய 'ஆரோன்' அவர்கள் வணங்குவதற்காக சிலையைச் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது. இதில் எது சரி? இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Saturday, December 5, 2009

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)

" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)

சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?

Tuesday, November 11, 2008

குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் ஒரு வரலாற்றுப் பார்வை



"பைபிளில் எங்குமே குறிப்பிடப் படாத யஹ்யா என்ற உண்மைப் பெயரை குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றாகும்! குர்ஆனில் சரித்திர தவறு இருக்கிறது என்ற விபரீத ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறித்தவர்களுக்கு சவுக்கடியாகவே சரித்திர ஆதாரங்கள் அமைந்துள்ளன".

Friday, October 24, 2008

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் வசனங்களைத் திரித்து வியாக்கியானம் செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து இல்லாததை இட்டுக் கட்டியும் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது. முஸ்லிம அறிஞர்களுக்கு முன் பகிரங்கமாக வருவதற்கு பயப்படும் மிஷினரிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம்.

Friday, October 10, 2008

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன்.

Thursday, October 2, 2008

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR


கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.

Monday, September 15, 2008

பைபிள் - ஓரு விரிவான அலசல் - 2

பைபிளில் உள்ளவை இறைவசனங்கள் என்று கிறித்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அது எவ்வாறு அருளப்பட்டது எனபது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முதலாவது பைபிளில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்ப்டடது என்பதாகும். பைபிளின் ஒரு வார்த்தையிலும் தவறு இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நமபிக்கையின் காரணமாகத்தான் பைபிளின் கருத்துக்களுக்கு எதிரான தனது அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்ட கலீலியோவுக்கு கிறித்தவ சபை தண்டனை வழங்கியது.