Pages

Subscribe:

Friday, October 24, 2008

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!

பகிரங்க விவாதம்! முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை!
மதத்தைப் பரப்புவதற்கு கிறித்தவ சபைகள் கையாண்டு வரும் வழிமுறைகள் மிகவும் தந்திரமானது! அற்புத சுகமளிக்கும் ஆராதனை என்று கூட்டம் நடத்தி செட்டப் அற்புதங்கள் காட்டியும், உலகியல் சுகங்களைக் காட்டி நலிந்தவர்களை ஏமாற்றியும் மதப் பிரச்சாரம் செய்து வந்த கிறித்தவ சபை முஸ்லிம்களை ஏமாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டு வருகிறது. குர்ஆனின் வசனங்களைத் திரித்து வியாக்கியானம் செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து இல்லாததை இட்டுக் கட்டியும் செய்யும் விஷமப் பிரச்சாரமே இது. முஸ்லிம அறிஞர்களுக்கு முன் பகிரங்கமாக வருவதற்கு பயப்படும் மிஷினரிகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது படிப்பறிவில்லாத பாமர முஸ்லிம்களிடம்.

Friday, October 10, 2008

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன்.

Thursday, October 2, 2008

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3

பைபிள் ஒரு விரிவான அலசல் - 3
M.M. AKBAR


கிறித்தவ மக்களால் இறைவேதம் என்று நம்பப் பட்டு வரும் பைபிளின் உறுதிப் பாட்டைக் குறித்த புதிய ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு அடிப்படைகள் மிக முக்கியமானதாகும். ஒன்று இன்ஸ்பிரேஷன் (Inspiration) மற்றொன்று ரிவலேஷன் (Revelation) ஆகும். முதலாவதை உந்துதல் என்றும் இரண்டாவதை வெளிப்பாடு என்றும் தமிழில் கூறலாம்.