திரித்துவம் எனும் மாயை - தொடர் 3
தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.